districts

img

கவிஞர் சுகாபோஸ் எழுதிய ‘மனிதி பெண்ணிய நூல்’ வெளியீட்டு விழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இளம் எழுத்தாளர் கவிஞர் சுகாபோஸ் எழுதிய ‘மனிதி பெண்ணிய நூல்’ வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் பிரேமா ரேவதி தலைமை வகித்தார். கவிஞர் அம்பிகாபதி வரவேற்றார். தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நூலை வெளியிட்ட, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இரா.சோமசுந்தரம் பெற்றுக்கொண்டார். மகா.இராஜராஜசோழன், இரா.காமராசு, ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நூலாசிரியர் சுகாபோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.