கும்பகோணம், ஜூலை 28- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் தஞ்சை மாவட்டக் குழு சார்பில் வாசிப்பு இயக்க துவக்க நிகழ்வு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சா. ஜீவபாரதி தலைமை வகித்தார். மாநில மதிப்புரு தலைவர் எழுத்தாளர் தமிழ்ச்செல் வன், மாநில துணைச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் விஜயகுமார், மாநில வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் புத்தகாலய மேளாளருமான சிராஜுதீன் மற்றும் புத்தகப் பிரியர்கள், தமுஎகச உறுப்பி னர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எடுத்துரைத் தார். வாசிப்பு இயக்க குழுவில் மாதந்தோ றும் ஒரு புத்தகத்தை படித்து கலந்துரையாடு வது என தீர்மானிக்கப்பட்டது. தஞ்சை மாநகரத் தலைவர் பிம்பம் சாகுல் நன்றி தெரிவித்தார்.