districts

புதிய மின்மாற்றிகள் துவக்கம்

மயிலாடுதுறை, ஏப்.28-

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே யுள்ள மேலப்பெரும்பள்ளம், நடுக்கரை கிராமங்களில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசா யிகள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால்,  புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

  இதையடுத்து மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் ரூ.8  லட்சத்து 15 ஆயிரம் செலவிலும், நடுக்கரையில்  ரூ.7  லட்சம் செலவிலும் புதிய மின்மாற்றிகள் அமைக்கப் பட்டு பயன்பாட்டு துவக்க நிகழ்ச்சி வியாழனன்று நடை பெற்றது.

  நிகழ்ச்சிக்கு சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற் பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர், இளமின் பொறியாளர் தினேஷ்,உதவி மின் பொறியாளர் வனிதா  ஆகியோர்  முன்னிலை வகித்தார்.

  பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா  எம்.முருகன் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார். தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங் கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலா ளர் ஞானவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.