கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை பாபநாசம் அருகே உள்ளது பண்டாரவாடை. இங்குள்ள மேலவீதி, வடக்குவீதி உள்ளிட்ட பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், மழை நாட்களில் வடக்குவீதி சாலையில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இப்பகுதியில் உள்ள பல்லாங்குழி சாலைகளை சீரமைத்து, தரமாக அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.