நாகர்கோவில், பிப். 3- கன்னியாகுமரி மாவட்டம் மேல காட்டுவிளை பகுதியில் பிப். 2 ஞாயி றன்று நடைபெற்ற இஸ்ரோ தலை வர் மற்றும் விண்வெளித்துறை செயலா ளராக பொறுப்பேற்றுள்ள முனைவர் வி.நாராயணனுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு புத்தகம் வழங்கி பேசுகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக பொறுப்பெற்றுள்ள முனைவர் வி.நா ராயணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்த நம் மண்ணின் விஞ்ஞானி ஆவார். 1984ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உடன் இணைந்து பணி யாற்றினார். ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விஞ்ஞானி மாதவன் நாயர், விஞ்ஞானி சிவன் ஆகியோர் இஸ்ரோ தலைவராக பதவி வகித்திருந்தனர். மூன்றாவதாக தற்போது விஞ்ஞானி வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு, வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஞ்ஞானி வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக கடந்த 15.01.2025 அன்று பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற உடன் அவரது தலைமையில் ஜிஎஸ்எல்வி-எப் 15 என்ற இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தி லிருந்து கடந்த 29.01.2025 அன்று வெற்றி கரமாக விண்ணில் செலுத்தினார்கள். அப்துல்கலாமுக்கு அடுத்து தமிழ் நாட்டை சார்ந்த நம்மண்ணை சார்ந்த விஞ்ஞானி அவர்கள் விண்வெளி துறை யில் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். விஞ்ஞானி நாரா யணன் வாழ்கை பயண வீடியோ இங்கு திரையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒளிப்பரப்ப செய்து, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விஞ்ஞானி வி.நாரா யணன் முன்மாதிரியாக திகழ்வார்கள். தொடர்ந்து அவர்களுடைய பணி சிறக்க மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.