தஞ்சாவூர், ஜூன் 29-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.கும ரப்பா செண்டினரி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் சென்னை சோகோ கார்ப்பரேஷன் மற்றும் ஈஷா இணைந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறு வனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித் தார். சோகோ தகவல் பாதுகாப்பு அதிகாரி சசிகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி பற்றி விளக்கம் அளித்தார்.
இதில், பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, கும ரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் ஸ்ரீதர், பள்ளி முதல்வர் சிந்து, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந் தன், நபிஷாபேகம், பள்ளி முதல்வர் சர்மிளா, சோகோ ஊழியர்கள் மஞ்சரி, துர்க்கா, மங்கேஷ்கர், ராகுல், பிர சாந்த், ஹரிகரன், அர்சித், முகேஷ்குமார், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.