districts

img

குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியார் ஆலய தேர்பவனி

அரியலூர், ஏப்.28 - அரியலூர் மாவட்டம், திரு மானூரை அடுத்த குலமாணிக்கம் கிராமத்திலுள்ள புனித இஞ்ஞாசி யார் ஆலய திரு விழாவையொட்டி  தேர்பவனி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா கடந்த ஏப்.20 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத் தந்தை செல்வராஜ் கொடியை புனிதப்படுத்தி திருவிழாவை தொடக்கி வைத்து திருப்பலி உரையாற்றினார். அத னைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார  ஆடம்பர தேர்பவனி சனிக்கிழமை நள்ளிரவு  நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் தங்க ளது வீடுகள் தோறும் மலர் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் புனித இஞ்ஞாசியார் அருளை பெற்றனர். செம்பியக்குடி, குல மாணிக்கம், புதுக்கோட்டை, பாக்கியநாத புரம், விளாகம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.