districts

img

மழைநீர் வடிய உடனடி நடவடிக்கை: சிபிஎம் கவுன்சிலருக்கு பாராட்டு

கரூர், நவ.15 - கரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு அசோக் நகர், ஜே.ஜே.நகர், டவர்  லைன் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி, வடிய வழி யின்றி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 41-வது வார்டு கவுன்சிலர் எம்.தண்ட பாணி, சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடும்  வகையில், மழைநீர் தேங்கியுள்ள அனைத்து பகுதிகளி லும் பொக்லைன் மற்றும் பணியாளர்களை கொண்டு மழைநீர் தேங்காமல் செல்வதற்கு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து தேங்கி நின்ற மழைநீர் வடிந்தது. மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய சிபிஎம் கவுன்சிலர் எம்.தண்டபாணியை அப்பகுதி மக்கள் பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.