districts

img

கந்தர்வகோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தல்

திருச்சி, ஜூலை 7-  மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள கந்தர்வகோட்டையில் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டுமென கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். திருச்சி, புதுக்கோட்டை, பெரம்  பலூர், அரியலூர் ஆகிய நான்கு  மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய்த்துறை அலுவலர் களுக்கான ஆய்வுக்கூட்டம் வியா ழனன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.  சிவசங்கரன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பேசி யதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தி லேயே மிகவும் பின்தங்கிய பகுதி யாக இருக்கும் கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில், கறம்ப குடிப் பகுதி மக்கள் கோட்டாட்சி யரை சந்திக்க வேண்டுமென்றால் புதுக்கோட்டைக்கு அல்லது இலுப்  பூருக்கு அலைய வேண்டி உள்ளது. இங்கு வாழும் ஏழை, எளிய மக்க ளின் நலனைக் கருத்தில் கொண்டு  கந்தர்வகோட்டையில் கோட்டாட்சி யர் அலுவலகம் அமைக்க வேண்டும்

சமத்துவபுரம்
கந்தர்வகோட்டை அருகே இந்திரா நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு அனைத்து சமூகத்தையும் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கான வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. அதேநேரத்தில் அவர்களுக்கு தனி பட்டா இல்லை. அவர்களுக்கு தனி நபர் பட்டாக் களை வழங்கி அந்தப் பகுதியை சமத்துவபுரமாக அரசு உருவாக்க வேண்டும். கீரனூர் அருகே நல்லூர் கிரா மத்தில் சத்திரத்திற்கு சொந்தமான 2,000-க்கும் அதிகமான ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் சுமார் 200  வருடங்களாக பல தலைமுறை களாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புடன் கூடிய கிணறு உள்ளது. எனவே. காலம் காலமாக சாகுபடி செய் யும் விவசாயிகளுக்கே பட்டா வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலப்பட்டா
கந்தர்வகோட்டை தாலுகா அலு வலகம் அருகே சத்திரத்திற்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலத்தில் காலம் காலமாக சாகு படி செய்துவரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பொதுவாக எல்லா கிராம நிர்  வாக அலுவலகங்களிலும் கிராம  நிர்வாக அலுவலர்கள் பெரும்பகு தியான நேரங்களில் இருப்ப தில்லை. அவர்களை கிராம மக்கள் பார்த்து சான்றிதழ் பெறுவது மிக வும் சிரமமாக உள்ளது. கிராம  நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப் பட்ட வட்டங்களிலேயே தங்கி பணி  செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு கழிப் பறை உள்ளிட்ட அடிப்படை வச திகளை செய்துகொடுக்க வேண் டும். சம்பந்தப்பட்ட பிர்காவிலேலே வருவாய் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்கி அவர்களும் அங்கேயே தங்கிப் பணிசெய்வததை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு எம்.சின்னத்துரை பேசினார்.

;