மன்னார்குடி, ஜூன் 16-
ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழி யர்கள் மற்றும் என்எம்ஆர் ஊழியர்கள் தனி யார் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் கூத்தாநல்லூர் தூய்மை பணி யாளர்களின் வேலை நிறுத்த நோட்டீஸ் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது.
துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் கூத்தா நல்லூர் செயலாளர் கே.முருகேசன் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், துணைத் தலைவர் கே.எஸ்.சிவசுப்பிரமணி யன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொழிலாளர்களுக்கு தலைமை செயலா ளர் அறிவித்தபடி ஓய்வறை ஏற்பாடு செய்ய வேண்டும். பாதுகாப்பு பொருட்களான கையுறை காலுறை போன்றவை உடனே வழங்க வேண்டும். 30 ஆண்டுகள் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு வெயிட்டேஜ் நிதி பலன் வழங்கப்பட வேண்டும். குடிநீர் பராமரிப்பு பணியில் உள்ளோருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதி யம் அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஜூன் 21 அன்று கூத்தாநல்லூர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டமும் ஜூன் 30 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற உள்ளது. இதற்கான வேலை நிறுத்த அறிவிப்பு விதி களின்படி நகராட்சி ஆணையரிடம் அளிக்கப் பட்டது.