சீர்காழி, ஜன.16- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் சில இடங்க ளில் ஊராட்சிகளுக்கு சொந்தமான இரும்பி னாலான குப்பை தொட்டிகள் பயனற்று சிதறி கிடக்கின்றன. ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள அனைத்து தெருக்களுக்கும் அரசால் இரும்பினால் செய்யப்பட்ட குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகள் ஊராட்சி சார்பில் தெருக்களின் முக்கியமான பகுதிகளில் வைத்து பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் சேருகிற குப்பைகளை, அந் தந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர். நவீன முறையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த தொட்டியில் குப்பைகள் கொட்டப்பட்டு மூடும் வசதியும், மேல் புறத்தை திறக்காமலேயே அடிப்பகுதியில் திறந்து மூடும் வகையிலும் இரும்பினால் ஆன கதவு பொருத்தப்பட்டுள்ளது. தொட்டி யில் குப்பைகள் நிறைந்தவுடன் தூய்மை பணியாளர்கள் வந்து அடிப்பகுதியில் அமைந்துள்ள இரும்பு கதவை எளிதில் திறந்து குப்பைகளை அகற்றிய பின்பு கதவை மூடிவிடுவர்.
ஊராட்சிகள் தோறும் குப்பைகளை முழு வதும் அகற்றி, சுகாதாரத்தை பாதுகாப்ப தற்காக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் குப்பை கள் சில இடங்களில் குவியல் குவியலாக கொட்டப்படுகின்றன. இதனால் காற்று வீசும் போது குப்பைகள் நான்குபுறமும் பறக் கின்றன. பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப், பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் சாலை மற்றும் தெரு ஓரங்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களில் நிறைந்து விடுகின்றன. ஆனால் கடந்த சில மாதங்க ளாக கொள்ளிடம் பகுதியில் உள்ள சில ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இரும்பு குப்பை தொட்டிகள் பயனற்றுக் கிடக்கின் றன. எனவே ஊராட்சி குப்பைகளை தெருக் கள்தோறும் உள்ள இரும்பு தொட்டிகளில் சேகரித்து, குப்பைகள் கண்ட இடங்களில் குவிக்கப்படுவதையும், சுகாதாரக் கேடு ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும். இதனை ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலை வர், ஊராட்சி செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும். சில பகுதிகளில் தேவையற்று கிடக்கிற குப்பை தொட்டிகளை உடனடியாக எடுத்து வந்து, உரிய இடங்களில் வைத்து குப்பை களை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது.