திருப்பூர், மே 12–
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடு கையில், ரூபாய் மதிப்பில் அதிகரித்திருக் கிறது. அதேசமயம் டாலர் மதிப்பில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. \
கடந்த 2022 – 23 ஆம் நிதியாண்டில் திருப் பூரில் இருந்து மொத்தம் ரூ.34 ஆயிரத்து 350 கோடி அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பூர்வாங்க புள்ளிவிப ரம் தெரிவிக்கிறது. இது அதற்கு முந்தைய 2021 – 22ஆம் நிதியாண்டு ஏற்றுமதி அளவான ரூ.33 ஆயிரத்து 525 கோடியுடன் ஒப்பிடும் போது ரூ.825 கோடி அதிகம் ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கி இந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ள 12 மாத காலத்தில் அதற்கு முந்தைய ஆண்டு மாதவாரியாக ஒப்பிடுகையில் ஏழு மாத காலம் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, 2022 ஆகஸ்ட் முதல் 2023 மார்ச் வரை உள்ள எட்டு மாத காலத்தில் நவம்பர் மாதம் தவிர அனைத்து மாதங்களுமே சரிவைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து இருக்கி றது. எனவே பணவீக்கத்தின் அடிப்படையில் ரூபாய் அளவில் ஏற்றுமதி அதிகமானது போல் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்க டாலர் அடிப்படையில் முந்தைய ஆண்டு ஏற் றுமதி அளவுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏற்றுமதி சரிவைச் சந்தித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. 2021 – 22 ஆம் நிதியாண் டில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி அமெ ரிக்க டாலர் மதிப்பில் 446 கோடியே 20 லட்சம் டாலர் ஆகும். ஆனால் 2022 – 23 ஆம் நிதியாண்டில் இது 427 கோடியே 90 லட்சம் அமெரிக்க டால ராக பதிவாகி உள்ளது. அதாவது ஓராண்டு காலத்தில் 18 கோடியே 30 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு திருப்பூர் ஏற்றுமதி சரிவைச் சந்தித்து இருக்கிறது. கடந்த நிதியாண்டில், முதல் நான்கு மாதம் தவிர ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான எட்டு மாத காலமும் டாலர் மதிப்பில், திருப்பூர் ஏற்றுமதி அளவு கடுமையாக சரிவடைந்துள்ளது.
கொரோனாவுக்கு முன்பிருந்தே திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப் பாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, நூல் விலை உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் பின் னலாடைத் தொழிலை நிலைகுலைய வைத் திருக்கிறது. அத்துடன் உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் விலை வாசி உயர்ந்து, மக்களின் வாங்கும் சக்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க சந்தை யிலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக் கிறது. எனவே, உள்நாட்டில் மோடி அரசு பின் பற்றும் கொள்கைகளுடன், உலகளவில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் உக்ரைன் யுத்தத்தை நீடித்து கொண்டிருப்ப தும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஒன்றிய தொழில் மற்றும் வர்த் தக அமைச்சரகத்தின் பூர்வாங்க புள்ளிவிப ரம் அடிப்படையில் மேற்கண்ட விபரம் தெரிய வந்துள்ளது. துல்லியமான விபரம் இன்னும் சில தினங்களில் கிடைக்கும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். எனினும் தற்போதைய நிலையில், திருப்பூர் பொலிவிழந்த நிலையிலேயே நீடிக்கிறது.