திருச்சிராப்பள்ளி, ஏப். 30-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65) இவர் விவசாய சங்கம் ஒன்றின் நிர்வாகியாக உள்ளார். இவர் ஞாயிற்றுக் கிழமை காலை அவருடைய சகோதரி வழக்கம் போல உணவு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தபோது சண் முகம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப் பதை கண்டு சிறுகனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித் தார். அவர்கள் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.