திருச்சிராப்பள்ளி, ஜூன் 3- திருச்சி மாநகர ஊர்க்காவல் படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஷ். இவருக்கு மஞ்சள் காமாலை நோய்த் தொற்று ஏற்பட்டு சிறுநீரக பாதிப்புக்கு உள்ளானார். இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 9.1.22 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் திருச்சி மாநகர ஊர்க்காவல் படை ஆளினர்கள் திரட்டிய ரூ.70 ஆயிரத்தை மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், வெங்கடேசன் மனைவியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையர், மாநகர ஆயுதப்படை, ஊர்காவல்படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி ஆகியோர் உடனிருந்தனர்.