சென்னை,ஜூன் 13-
தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாதம் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த தடைக்காலம் புதனன்று (ஜூன் 13) நள்ளிரவில் முடிவடைகிறது.
கடலுக்குள் செல்ல சென்னை காசிமேடு மீன வர்கள் தயாராகி வருகின்ற னர். காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீனவர் கள் கடலுக்குள் செல்ல தங்களது விசைப்படகு களில் ஐஸ் ஏற்றுவது, வலைகளை பின்னி சரி செய்வது, டீசல் நிரப்புவது, உதிரி பாகங்கள் பழுது பார்த்து சரி செய்வது, தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் நிரப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.