districts

img

கரூரிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க கோரிக்கை

கரூர், ஜூன் 21-

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் கரூர் உட்கோட்டத்தின் 8 ஆவது மாநாடு நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் செவந்தலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணி வர வேற்றார். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வேலை அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்தார்.  

   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் எம். சுப்பிரமணி  சிறப்புரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் ஆர்.சிவக்குமார் நன்றி  கூறினார். உட்கோட்டத்திற்கு புதிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலை வராக கே.எம்.சுப்பிரமணி, செயலாளராக ஆசைத்தம்பி, பொருளாளராக ஆர். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவ ராக எஸ்.வெங்கடாசலம், இணைச் செய லாளராக முருகேசன் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

   கரூர் மாவட்டத்தில் காலை மற்றும்  மாலை நேரங்களில் முக்கிய வழித்தடங்க ளில் மகளிர் பேருந்துகள் இயக்க வேண்  டும். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யை நான்கு வழிச்சாலையாக மாற்றிய மைக்க வேண்டும். பகல் நேரத்தில் கரூரி லிருந்து சென்னைக்கு செல்வதற்கு புதிய  ரயில் இயக்க வேண்டும். சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை  பணிக்காலமாக அறிவித்து அரசாணை வழங்க வேண்டும். பணியின் போது உயிரி ழந்த சாலைப் பணியாளர் குடும்பத்தினரின் வாரிசுக்கு நெடுஞ்சாலை துறையிலேயே பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.