districts

img

கரூர் சேரன் பள்ளியில் ‘இளந்தளிர் இல்லம்’ திட்ட நிகழ்ச்சி

கரூர், டிச.16 - கரூர் மாவட்டத்தில் பெண் குழந்தை திரு மணம் எதிர்ப்பு தொடர்பான இளந்தளிர் இல்லம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. கரூர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதனன்று நடைபெற்றது. நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலை மையில் இளம் தளிர் இல்லம் திட்டத்தின் கீழ்  மாணவிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.  மாணவிகளின் ‘பெற்றோர்கள், குழந்தை திருமணம் செய்து வைக்கமாட்டேன்’ என்று  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, பெண் குழந்தை கள் இளம் தளிர் இல்லம் தொடர்பான அனுபவ  பகிர்வுகள், இத்திட்டம் தொடர்பாக மாணவி களின் பெற்றோர் தங்கள் கருத்து கூறும் நிகழ்ச்சி, மாணவிகளின் இல்லத்தில் மரக் கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி, மாணவி களின் இல்லங்களின் முகப்பில் ‘இளந்தளிர் இல்லம்’ என்ற ஒட்டு வில்லைகள் ஒட்டுதல்  ஆகியவை ஆகிய நிகழ்வுகள் ஒருங்கி ணைந்து நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கரூர் வருவாய் கோட் டாட்சியர் பாலசுப்ரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளியின் முதல்வர் பழனியப்பன், மாவட்ட  குழந்தை பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், மன்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.