தூத்துக்குடி, நவ.3- திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு மேற்கொண்டார். கந்த சஷ்டி திரு விழாவை முன்னிட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 6 காவல் துணை கண்காணிப்பா ளர்கள், 27 காவல் ஆய்வா ளர்கள் உட்பட 1000 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறையி னரின் பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கந்த சஷ்டி திருவிழாவில் காவல்துறையினரின் பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளு டன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரி சனம் பொதுதரிசனம் என வழிகாட்டி போர்டுகள் வைக்கவும், குடிதண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும், கடற்கரை பகுதியில் ஆழமான பகுதி களுக்கு செல்லாமல் கடலில் கயிறு கட்டியும், கடற்கரை யில் ரோந்து வாகனத்தில் போலீசார் தொடர்ந்து பாது காப்பு பணியில் ஈடுபட வேண்டும் மற்றும் போக்கு வரத்து வழித்தடங்களில் போக்குவரத்து பிரிவு காவல்துறை ஆங்காங்கே வழித்தடம் மாற்றம், வழித்தட பாதை உட்பட அனைத்து விவரங்களையும் அறிவிப்பு பலகைகள் மூலம் வைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கோவில் வளாகப் பகுதி களில் ஈடுபட்டிருக்கும் போலீ சாரின் பாதுகாப்புப் பணியை ஆய்வு செய்து, பொதுமக்களின் உயிருக் கும், உடைமைக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா மல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையி னருக்கு அறிவுரைகள் வழங்கினார்.