திருச்சிராப்பள்ளி, ஜூலை 19 - அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கக் கோரி கல்மந்தை காலனி மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர் கல்மந்தை காலனியில் பல தலைமுறைகளாக வாழ்ந்த பயனாளி கள் அனைவருக்கும் அடுக்குமாடி குடியி ருப்பில் வீடு வழங்க வேண்டும். கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பில் மக்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் லெனின் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா பேசினார். இதில் கிளைச் செயலாளர் மகாலிங்கம் மற்றும் திர ளான மக்கள் பங்கேற்றனர்.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், வெள்ளியன்று மாலை திருச்சி கிழக்கு தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சமூக தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.