கரூரைச் சேர்ந்த குரல் இசை ஆசிரியை நா.பூரணி முரளிதரன், குரல் இசை பிரிவில் கடந்த 20 ஆண்டுகளாக சிறந்த சேவை செய்தமைக்காகவும், சாதனைகளை புரிந்தமைக்காவும் தமிழக அரசால் வழங்கப்படுகிற கலைச்சுடர்மணி விருது வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பாராட்டு பத்திரம், பொன்னாடை பொற்கிழி வழங்கி மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பாராட்டினார்.