மயிலாடுதுறை, அக்.29 - மயிலாடுதுறை மாவட் டம், கொள்ளிடம் அருகே யுள்ள கடவாசல் ஆர்எம்ஆர் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டு கொடியை பி. சம்பந்தம் ஏற்றி வைத்தார். எஸ்.பாரதிராஜா வரவேற் றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்கார வேலன் உரையாற்றினார். ஆலங்காடு ஊராட்சி ஏகோஜி மகாராஜபுரம், வெண் மணி நகரில் குடிசை கட்டி குடியிருந்து வரும் மக்க ளுக்கு உடனடியாக குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். எடமணல், வேட்டங்குடி, வாடி, குட முரட்டி, வெண்மணி நகர் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும். கிடப்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ப.மாரியப்பன், சி. விஜயகாந்த் ஆகியோர் உரையாற்றினர். மாநாட் டில் 9 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய் யப்பட்டு, ஒன்றியத்தின் புதிய செயலாளராக கே. கேசவன் தேர்ந்தெடுக்கப் பட்டார். மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் நிறை வுரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் அ.நேதாஜி நன்றி கூறினார்.