districts

ஜூன் 3 கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்: ஆட்சியர்

மயிலாடுதுறை,  மே 29 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில்,  தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  2021 - 2022 ஆம் ஆண்டிற் கான மானியக் கோரிக்கை யில் நாட்டிற்காக பாடுபட்ட  தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத் கர், தந்தை பெரியார், பேர றிஞர் அண்ணா, முத்தமிழறி ஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர் களுக்குப் பேச்சுப் போட்டி கள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும்  என அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி 2022 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம்  தேதி முத்தமிழறிஞர் கலை ஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட  உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை முடிந்து பள்ளி கள் திறக்கப் பெற்ற பின்னர் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப் படும். கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 3.6.2022 (வெள்ளிக்கிழமை) அன்று  காலை 10 மணிக்கு மயிலாடு துறை மாவட்டத்திலுள்ள தருமபுரம் ஞானாம்பிகை அர சினர் மகளிர் கலைக் கல்லூ ரியில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அப் போட்டியில் கலந்து கொண்டு  வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000,  மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத் தில் உள்ள கல்லூரி முதல்வர் கள், தங்கள் கல்லூரி மாண வர்களிடையே முதற்கட்ட மாக கீழ்நிலையில் பேச்சுப்  போட்டிகள் நடத்தி மாணவர் களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டி யில் பங்கேற்க, கல்லூரிக்கு 2  மாணவர்கள் மிகாமல் அனுப்ப வேண்டும். போட்டி களில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப் பட்டி யல் பின்வரும் முகவரியில்  நேரிலோ, அஞ்சலிலோ அல்லது adtd.nagai@gmail. com என்ற மின்னஞ்சலில் 1.6. 2022-க்குள் அனுப்பி வைக்க  வேண்டும் என அறிவித்துள் ளார்.