districts

ஜூன் 24 திருவாரூரில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூர், ஜூன் 17 -  

    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கரு ணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், மாவட்டந்தோறும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் இரத்த அழுத்த பரி சோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக் கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்ட றியும் பரிசோதனை, முழு இரத்த பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு,  தொண்டை, பல், எலும்பு, மனநலம் மருத்துவங்கள், சித்த மருத்துவம்  மற்றும் ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவப் பிரிவி லிருந்து சிறப்பு மருத்துவர்களால் ஆலோசனைகள் வழங்கப்படும்,

    இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஜூன் 24 அன்று காலை  8 மணி முதல் மாலை 5 மணி வரை, மன்னார்குடி வட்டாரம் ஆலங் கோட்டை அரசினர் பள்ளி மற்றும் திருவாரூர் வட்டாரம் காட்டூர் அரசினர்  பள்ளியில் நடைபெறுகிறது. இந்த இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.