districts

ராகுல் மீதான தீர்ப்பு நிறுத்தி வைப்பு ஜவாஹிருல்லா எம்எல்ஏ வரவேற்பு

பாபநாசம், ஆக.5 -

     ராகுல் காந்தி மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி  வைத்திருப்பதை மனித நேய மக்கள் கட்சி வரவேற் றுள்ளது.

    இதுகுறித்து கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை யில், “காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்  காந்திக்கு குஜராத் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. நாட்டில்  இன்னும் நீதி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை எடுத்துக்  காட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நாடு  முழுவதும் பெரும் ஆதரவு அலையை உருவாக்கியது. ஒன்றியத்தை ஆளும் பாஜகவிற்கு எதிராக அவர்  எழுப்பும் கேள்விகள் ஆணித்தரமாகவும் ஆக்கப்பூர்வ மானதாகவும் அமைந்தன. இந்த சூழலில் 2019 தேர்தல்  பரப்புரையின் போது, அவர் ஆற்றிய உரைக்காக 2019ல்  குஜராத் மாநிலம் சூரத்தில் தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கில், இந்த ஆண்டு மார்ச் 23 அன்று சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

     இதனைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பி னர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் அதனை நிறுத்தி வைத்துள்ளது. இதன் விளை வாகத் தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு நாடாளு மன்ற உறுப்பினராக தனது பணியைத் தொடர்வதற்கு வழி  பிறந்துள்ளது.

    தங்களை விமர்சிப்பவர்களை எதிர்த்து, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்களின் குரல் வலையை நெறிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற  நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருந்த பாஜகவிற்கு இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் பெரும் குட்டு  வைத்துள்ளது” என கூறியுள்ளார்.