மயிலாடுதுறை: இரு வீடுகளில் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை
மயிலாடுதுறை, பிப்.26- மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், மறை யூர் தாமரைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணபதி (59). சனிக்கிழமை இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளை யர்கள் பீரோவிலிருந்த ஆறரை பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென் றுள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது வீட்டிற் குள் புகுந்த கொள்ளையர்கள் இரண்டு பீரோக்களை உடைத்து அதிலிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளை டியத்துச் சென்றுள்ளனர். கோவிந்தன் வெளிநாட்டில் பணி யாற்றி வருகிறார். அவரது மனைவி கோகிலா (45) சிகிச் சைக்காக பிப்.23-ஆம் தேதி சென்னை சென்றுள்ளார். குத்தாலம் காவல்துறையினர் இரு கொள்ளைச் சம்ப வங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூப்பந்தாட்டப் போட்டி: ஏழுமலையான் பாலிடெக்னிக் சாம்பியன்
திருவாரூர், பிப்.26- நாகப்பட்டினம்-புதுச்சேரி மண்டல அளவிலான பூப்பந் தாட்டப் போட்டி பாண்டிச்சேரி மோதிலால் நேரு அரசி னர் பாலிடெக்னிக் கல்லூரியில் பிப்.24-ஆம் தேதி நடை பெற்றது. இந்தப் பேட்டியில் கொல்லுமாங்குடி ஏழுமலை யான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல் இடத்தைப் பெற்று பரிசுக் கோப்பையை வென்றனார். கல்லூரியின் சேர்மன் ரவி, வைஸ் சேர்மன் ராக்கள் தினேஷ், தாளாளர் தேவகி, இயக்குநர்கள் காவ்யபிரியா, மதுமிதா முதல்வர் பூபதி, மேலாளர் சரவணன், உடற் கல்வி ஆசிரியர் துரை, ஜீவானந்தம் ஆகியோர் போட்டி யில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
மணமேல்குடி மருத்துவமனையில் இரத்த வங்கி அமைக்கக் கோரிக்கை
அறந்தாங்கி, பிப்.26- புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் டிஎன்டிஜே சார்பாக சமுதாய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சேக் தாவூது, செயலாளர் முகமது யூசுப், பொருளாளர் பைரோஸ்கான், துணைத் தலைவர் ராசிக், துணை செய லாளர் சர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் ரஹ்மான், அப்துல் அஜீஸ் ஆகியோர் பேசினர். பூரண மது விலக்கை அமல்படுத்தி போதையில்லா தமிழகம் உரு வாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாபட்டி னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன் வசதி ஏற் படுத்த வேண்டும், மணமேல்குடி அரசு மருத்துவமனை யில் இரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும், அம்மாபட்டி னம் தெருக்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் பத்திரிகைகள் மயிலாடுதுறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பாராட்டு
மயிலாடுதுறை பிப்.26- மயிலாடுதுறை நக ராட்சிக்குட்பட்ட பரிமள ரெங்கநாதர் கோயில் நந்த வனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார் பில் ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமி ழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் நடை பெற்ற புகைப்படக் கண் காட்சியில் தமிழ்நாடு அர சின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பத்து நாட்கள் நடைபெற்ற கலை நிகழ்ச்சி களில் பங்குபெற்ற 555 பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார் நிகழ்வில் பேசிய ஆட்சி யர் மகாபாரதி, “ ஜனநாய கத்தின் நான்காவது தூணாக விளங்கிவரும் பத்திரிகை துறை சார்ந்த நண்பர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தரு கிறது. அரசு சார்பில் வெளி யிடப்படும் அறிக்கைகளாக இருந்தாலும் சரி, பொதுமக்க ளுக்கு தேவையான செய்தி களைத் தருவதும், பொது மக்களிடமிருந்து கோரிக்கை களை நிர்வாகத்துக்கு தெரி யப்படுத்துவதும் செய்தி துறையின் மிக முக்கியப் பங் களிப்பாக உள்ளது. தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சாதனை களை அடித்தட்டு மக்களை சென்று சேர்ப்பதில் ஊட கங்கள் மாவட்ட நிர்வாகத் திற்கு ஒத்துழைக்கின்றன என்றார் இந்நிகழ்ச்சியில் மயி லாடுதுறை ஒன்றியக் குழுத்தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூ ராட்சித் தலைவர் சுகுணா சங்கரி, மாவட்ட செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் ஆ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உயிரிழந்தோர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்
சாலைப் பணியாளர்கள் கோரிக்கை
தஞ்சாவூர், பிப்.26 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம், கவன ஈர்ப்பு கோட்ட அள விலான பொதுக்குழு கூட்டம், தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில், கோட்டத் தலைவர் பி.சரவணன் தலை மையில் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி.தம்பி அய்யா வரவேற்றார். மாநிலத் துணைத்தலை வர் எஸ். மகேந்திரன் துவக்க உரையாற்றினார். கோட்டச் செயலாளர் டி.ஜனார்த்தனன், மாநிலத் துணைத்தலைவர் டி.சிங்கராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநிலப் பொதுச் செய லாளர் ஏ.அம்ஜராஜ் நிறைவுரையாற்றினார். கோட்டப் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறி னார். கே.வீரையன், எஸ்.திரவியராஜ், ஜி.ரமேஷ் மற்றும், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பாஸ்கரன், அரசு ஊழியர் சங்க தெற்கு வட்டச் செயலாளர் ஏ.தமிழ் மாறன் உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். “சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியா ளர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ. 20,200, தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண் டும். சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தோ ரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனத்தை விரைந்து வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனி யார் பராமரிக்கும் ஒப்பந்த நடைமுறையை கை விடுவதாக அறிவித்தாலும், சாலையைப் புதுப் பிக்க, ஒப்பந்ததாரர் ஐந்து வருடம் பராமரிக்க அனுமதிக்கும் நடைமுறையை கைவிட்டு, அரசே சாலைப் பராமரிப்பு பணியை மேற் கொள்ள வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செறிவூட்டிய அரிசிக்கு எதிராக மார்ச் 15-இல் போராட்டம்
தஞ்சாவூர், பிப்.26- செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக தமிழகத்தி லுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியரகங்கள் முன் மார்ச் 15- ஆம் தேதி போராட்டம் நடத்துவது என செறி வூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான அமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் பாரம்பரிய உணவுகளான அரிசி, சிறுதானியங்களில் போதிய சத்துகள் இருக்கும்போது, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். செறிவூட்டப் பட்ட அரிசியைத் தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரகங்கள் முன் சத்து மிகுந்த பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் தயிர் சோறு, தக்காளிச் சோறு, தேங்காய்ச் சோறு, சர்க்கரைப் பொங் கல், அவல் கஞ்சி போன்ற உணவுகளைத் தயாரித்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டத்தை மார்ச் 15- ஆம் தேதி நடத்துவது, பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுபடியான விலையில் விவசாயி களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழ்நாடு தலைமைச் செயலகம் முன் இரண்டாம் கட்ட மாக பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்து வழங்கும் விழிப்புணர்வுப் போராட்டத்தை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்க. சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். ஜி.எஸ். தனபதி, வேணு ராஜசேகர், தங்க. குமரவேல், ஆலோ சனைக் குழு உறுப்பினர்கள் வேலுமணி, ரவிச்சந்திரன், பாரதிதாசன், விக்னேஷ், அரு.சீர். தங்கராசு, அருண் சுபாஷ், செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி–2023 விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர், பிப்.26 - தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம், பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி–2023 விருது வழங்கும் விழா நடைபெற்றது. துணைவேந்தர் செ.வேலுச்சாமி தலைமை வகித் தார். பல்கலைக்கழகப் பதிவாளர் ஸ்ரீவித்யா, மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி னார். முன்னதாக பல்கலைக்கழகத்தின் சேர்க்கை இயக் குநர் ஜெ.ஜெயசித்ரா வரவேற்றார். கல்வியியல் துறை பேராசிரியர் சேதுராசன் நன்றி கூறினார். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாண வர்களிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டது. 144 பள்ளி களைச் சேர்ந்த 255 ஆசிரியர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டன. இதில் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என 80 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அனுமதியின்றி இயங்கிய சரக்கு லாரிக்கு அபராதம்
கும்பகோணம், பிப்.26- கும்பகோணம் புற வழிச் சாலை பகுதியில் வட் டார போக்குவரத்து அலு வலர்கள் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு லாரி யை நிறுத்தி சோதனை செய் தனர். அப்போது சரக்கு லாரி யில் அளவை விட கூடுத லாக பாரம் ஏற்றி வந்ததும் உரிய அனுமதி இல்லாமல் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்ததும் தெரியவந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் செந் தாமரை சரக்கு லாரியைப் பிடித்து கும்பகோணம் வட் டாரப் போக்குவரத்து அலு வலகத்திற்கு கொண்டு சென்றார். லாரியை வெளி மாநிலத்திலிருந்து தமி ழகத்தில் இயக்கியதற்காக வரியாக ரூ.11 ஆயிரத்து 950-ம், அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்ததற்காக ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
கட்டுமான சங்க கிளை துவக்கம்
திருச்சிராப்பள்ளி, பிப்.26- திருச்சி மாவட்ட கட்டு மான தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா திருவானைக் காவலில் நடைபெற்றது. சிஐ டியு ஒருங்கிணைப்பாளர் ரகு பதி தலைமை வகித்தார். சங் கக் கொடியை சிஐடியு மாந கர் மாவட்டத்லைவர் சீனி வாசன் ஏற்றினார். சங்கப் பெயர்ப் பலகையை கட்டு மான சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் திறந்து வைத்தார். கட்டு மான சங்க மாநகர் மாவட்டப் பொருளாளர் உலகநாதன், மாவட்டத் துணைச் செயலா ளர் வெங்கடேசன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்ரீரங்கம் பகுதிச் செய லாளர் தர்மா, ஆட்டோ சங்க மாவட்ட அமைப்புச் செயலா ளர் வெற்றிவேல், வீரமுத்து, கோவிந்தன், சுப்பிரமணி யன், கட்டுமான சங்க கிளைத் தலைவர் ரத்தினவேல், செய லாளர் அண்ணாமலை, பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் சக்தி வேல், துணைச் செயலாளர் உதயகுமார் உட்பட பங் கேற்றனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், பிப்.26- திருவாரூர் மாவட்ட விவ சாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் பிப்ரவரி 28- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 1.35 வரை திருவாரூர், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவ சாயிகள் மற்றும் விவசாயி கள் சங்கப் பிரதிநிதிகள் தங் கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரி வித்து பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.