திருவாரூர், ஜுன் 5 - திருவாரூர் மாவட்டத் தில் 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) ஜூன் 11 முதல் 14 வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டத்திற்குரிய தேதி களில் தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடை பெறவுள்ளது.
திருவாரூர் வட்டத்தில் ஜூன் 11 முதல் ஜூன் 13 வரை, மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், கூத்தா நல்லூர் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13 வரை மாவட்ட வரு வாய் அலுவலர் தலைமை யிலும், நன்னிலம் வட்டத்தில் ஜூன் 11 முதல் 14 வரை திரு வாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் ஜூன் 11 முதல் 12 வரை மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை யிலும் நடைபெறுகிறது.
குடவாசல் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் தலைமையிலும், திருத் துறைப்பூண்டி வட்டத்தில் ஜூன் 11 முதல் 13 வரை மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் (ம) சிறுபான்மையி னர் நல அலுவலர் தலை மையிலும், வலங்கைமான் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13 வரை தனித்துணை ஆட்சி யர்-மன்னார்குடி வருவாய் நீதிமன்றம் தலைமையிலும், மன்னார்குடி வட்டத்தில் ஜூன் 11 முதல் 14 வரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13 வரை உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடைபெற வுள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை தங்களது வட்டத்திற்குரிய வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன்பெற லாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.