மதுரை, ஏப்.30-
உலகத் திருநாளான உழைப்பாளி மக்களின் மே தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் எம்.சத்திரப் பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், போட்டிக்கான உறுதி மொழியை வாசிக்க, அமைச்சர்கள், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் முன்னிலையில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழியேற்றனர். போட்டியை அமைச் சர்கள் ஏ.ஆர்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். பெண் வர்ணனையாளர்கள் அன்னபாரதி, மண்வாசனை லாவண்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
ஜல்லிக்கட்டில் திமுக தெற்கு மாவட்டச் செயலா ளர் மு.மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண் டனர். போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.