districts

img

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப்.16-  பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திமுக அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், சுரேஷ், மணிமாறன், நடனம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மலர்விழி, மாரிமுத்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ரெங்கசாமி, எம். ராஜாங்கம், கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  இதே போல், மாவட்டத்தின் அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.