திருச்சிராப்பள்ளி, பிப்.15- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், பால்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பிரபு வரவேற்றார்.
கும்பகோணம்
கும்பகோணம் வட்டாரம் ஜாக்டோ,-ஜியோ சார்பாக கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ- ஜியோ கூட்டுத் தலைமையாக அறிவுடைநம்பி, மதியழகன் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டச் செயலாளர் பிரபாகரன் கோரிக்கையை விளங்கி பேசினார். திருவிடைமருதூர் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ. வேணி தலைமை வகித்தார். ம.கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். கோரிக்கை விளக்கி தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சங்கம் மாநில பொறுப்பாளர் விஸ்வேஸ்வரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்ணன் ஆகியோர் பேசினார்.
திருவாரூர்
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டச் செயலாளர் நா. தம்பிதுரை, அரசு பணியாளர் சங்க செயலாளர் ராஜ்மோகன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி கிருபானந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். செங்குட்டுவன், அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.பெ. இரவி, அரசு கலை கல்லூரி ஆசிரியர் கழக பொறுப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மன்னார்குடி மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டச் செயலாளர் செந்தில்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முக வடிவேலு. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் சுதாகர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் பார்த்திபன், ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்புச் செயலாளர் முரளி ஆகியோர் பேசினர். ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் வெ. சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
பேராவூரணி
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் நாவலரசன் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் தமிழரசன் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி இளமதியன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவி. தாமரைச்செல்வன் பேசினார். முத்துப்பேட்டை முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் தேவேந்திரன், வருவாய்த்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஊதிய சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரங்கசாமி, தலைமை செயலக ஆய்வு ஊழியர் சங்கத்தின் தலைவர் வில்வம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம், முத்துப்பேட்டை ஊரக வளர்ச்சித் துறையின் மேலாளரும் மாவட்ட மகளிர் குழு தலைவியுமான தமிழ் சுடர் ஆகியோர் உரையாற்றினர். இதே போன்று திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசம்
பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர், ஆசிரியர் சங்கத்தினர் பங்கேற்றனர். கரூர் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.எஸ்.அன்பழகன், பிரேம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் சி.கண்ணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் ஜெ.ஜெயராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எல்.பாலசுப்பிரமணி, தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில செயலாளர் ஆ.சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் கே.இளங்கோ உள்ளிட்ட பலர் உரையாற்றினர். குளித்தலை பேருந்து நிலையம், காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் பா. ஜெயவேல்காந்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் ஆகியோர் கண்டன உரையாற்றினார். கடவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ம.முத்தமிழன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வட்டத் தலைவர் தே. உதயன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளர் என்.பழனியப்பன், வட்டச் செயலாளர் எம்.வசந்தி ஆகியோர் உரையாற்றினர்.