தென்காசி, ஜூன் 9
தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு மூலம் சேர 8ம் வகுப்பு/10ம் வகுப்புதேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மே 24 முதல் பெறப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான கடைசி தேதி மே 20 வரை என கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பங்களை விண்ணப்பிக்க 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் சான்றி தழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ்,ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களு டன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தென்காசி, கடைய நல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை நேரில் அணுகவும்.
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூரை நேரிலும் 04633-280933, 04633-277962,04633-290270 ஆகிய தொலை பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.