districts

img

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் மன்னார்குடி நகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஆக.1-

     மன்னார்குடி இரண்டாம் தெரு வில் பாதாளச் சாக்கடையில் மணி கண்டன், முத்துக்குமார், ராஜ கோபால் என்ற மூன்று துப்புரவு பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் இறக்கிவிட்டுள்ளது.

     இச்செயலை கண்டித்தும் மன்னார்குடி நகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர் களை கைது செய்ய வலியுறுத்தி யும் செவ்வாயன்று கண்டன ஆர்ப்  பாட்டம் சிஐடியு சார்பில் நடை பெற்றது.   

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவ சுப்பிரமணியன் தலைமை ஏற்றார். நிர்வாகிகள் எஸ்.சுதாகரன் பி.முனி யப்பன், வி.சரவணன், வி.விஜயா,  கே.சிங்காரம், வினோத் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்,  பாதிக்கப்பட்ட மணிகண்டன், ராஜ கோபால், வினோத்குமார் ஆகி யோர் பேசினர். சிஐடியு மாவட்டத்  தலைவர் எம்.கே.என்.ஹனிபா,  மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், பொருளாளர் இரா.மாலதி,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.தமிழ் மணி உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். நாடே வெட்கி தலைகுனி யும் இந்த அவலத்தை மூடி மறைக்க சம்பந்தப்பட்ட மூன்று தொழிலாளி களையும் 5 மணி நேரத்திற்கு மேல்  நகராட்சி அலுவலக அறைக்குள் வெளியே செல்ல விடாமல் அடைத்து  வைத்ததோடு கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ளனர். இச்செயல்கள் திருவாரூர் மாவட் டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

    எம்.கே.என்.ஹனிபா பேசும் போது, மனித கழிவுகளை மனிதனே  அல்லும் அவலம் வெளியே தெரிந்து விட்டதால் அந்த மூன்று  தொழிலாளிகளையும் அலுவல கத்திற்கு வரச் செய்து காலை 10  மணியிலிருந்து பிற்பகல் 3 மணி  வரை அடைத்து வைத்து அவர்களா கவே தன்னிச்சையாக அந்த வேலையை செய்ததாக கட்டாயப் படுத்தி எழுதி வாங்கியுள்ளனர். நடந்த தவறை சரி செய்து கொள்வ தற்கு பதிலாக மீண்டும் ஒரு பெரிய  தவறை மன்னார்குடி நகராட்சி நிர்  வாகம் செய்துள்ளது. சம்பந்தப் பட்ட அலுவலர்களை கைது செய்ய  வேண்டும். இதை விட்டு விடாது எங்கள் நடவடிக்கை தொடரும் என்றார்.