பாபநாசம், செப்.22- பாபநாசம் அருகே மெலட்டூரில் இருளர் இனத் தைச் சேர்ந்த 23 குடும்பங் களுக்கு தலா ஒரு குடும் பத்திற்கு ரூ.4,37,230 வீதம் வீடு கட்டுவதற்கான ஒர்க் ஆர்டரை அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் வழங்கினார். இதில் திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ், அம்மா பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், முகம்மது அமானுல்லா, டெப்டி பிடிஓ தாமரைச் செல்வி, உதவி பொறியா ளர் கார்த்திக்கேயன், திமுக மெலட்டூர் பேரூர் செயலர் சீனு உட்பட பயனாளிகள் பங் கேற்றனர்.