districts

img

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கல்

அறந்தாங்கி, டிச.19 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக கிளை மேலாளரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.  அதில், “தமிழக அரசு போக்குவரத்து கழ கங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி  வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்கு வரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படை யில், அடிப்படை ஊதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேருந்துகளை முழுமை யாக இயக்க வேண்டும். பதிவு செய்த  அனைவருக்கும் கருணை அடிப்படை யில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.  15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை துவக்கி ஒப்பந்தத்தை இறுதிப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்கள்  சார்பாக அரசு அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.  பணி ஓய்வுபெற்ற ஊழியர்களின் அக விலைப்படி உயர்வு குறித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்தும், தீர்ப்பை அமல்படுத்து வதற்கு மாறாக மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகளிலும் உரிய  தீர்வு காணாமல் காலம் தாழ்த்தப்பட்டு வரு கிறது. இதனால் அனைத்து தொழிலாளர் களும் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.