districts

img

வி.தொ.ச தொடர் போராட்டம் வெற்றி 31 தொழிலாளர் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜன.10 - அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று கொடுத்த மனுவில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பேரூர் ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் விவ சாயத் தொழிலாளர் குடும்பத் தினர் வசித்து வந்தனர். இப்பகுதியில் நீண்ட கால மாக வசித்து வரும் மக்களுக்கு  குடிமனை பட்டா வழங்க கோரி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 3 ஆண்டு களாக தொடர்ந்து போராட் டம் நடத்தியதன் விளைவாக, கடந்த ஜன.3 ஆம் தேதி 31  விவசாய தொழிலாளர் குடும் பங்களுக்கு குடிமனை பட்டா  வழங்கப்பட்டது.  குடிமனை பட்டா கிடைக்க முயற்சி எடுத்த வட்டார நிர்வா கத்திற்கும், மாவட்ட நிர்வா கத்திற்கும், தமிழக அரசுக் கும் இப்பகுதி மக்களின் சார் பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரி வித்திருந்தார்.

;