புதுக்கோட்டை, மே 22 -
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஐ.சா.மெர்சி ரம்யா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை பொறுப்பேற் றுக் கொண்டார்.
பின்னர் அவர் தெரி விக்கையில், ‘புதுக்கோட்டை மாவட்டத் தின் அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள், உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்தும் விரைவாகவும், துரிதமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணி யாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் விரை வாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்’ என்றார்.
ஐ.சா.மெர்சி ரம்யா 2015 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். 2016 ஆம் ஆண்டு உதவி ஆட்சியராக ஈரோடு மாவட்டத்திலும், 2017 - 2019 ஆம் ஆண்டில் திண்டிவனம் சார் ஆட்சியராக வும், 2019 - 2021 ஆம் ஆண்டில் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) கன்னியாகுமரி மாவட்டத்திலும் 2021-2023 ஆம் ஆண்டில் வணிக வரித்துறையில் இணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார். தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.சா.மெர்சி ரம்யாவுக்கு முன்னாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் அனைத்துத் துறை அலுவ லர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.56,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.