தஞ்சாவூர், ஏப்.26-
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் க்யூஆர் கோடு செயலி மூலம் ஆட்டோக் களை இயக்குவது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்தவர்களை உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேரன் வரவேற்றார்.
மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணை யர் க.சரவணக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா, வட்டாரப் போக்கு வரத்து ஆய்வாளர் ஆனந்த், காவல் ஆய் வாளர்கள் வி.சந்திரா, கருணாகரன், ரவிச் சந்திரன் மற்றும் நுகர்வோர் அமைப்புப் பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தஞ்சாவூர் மாநகரில் க்யூ.ஆர் கோடைப் பயன்படுத்தி புதிய செல்போன் செயலி மூலம் ஆட்டோக்களை இயக்குவது தொடர்பாக “ஊர் கேப்ஸ்” என்ற நிறுவனத்தின் சார்பில் அதன் நிர் வாகி மரிய ஆண்டனி பேசியதாவது: தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலை யில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானமும், பயணிகளுக்கு பாதுகாப் பான பயணமும் அதே நேரத்தில் இருவ ரும் பேரம் பேசாமல் உரிய கட்டணத்தில் இயக்க ஊர் கேப்ஸ் என்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்மார்ட் போனில் புதிய செயலியில் ஆட்டோக்களை இயக்க முன் வந்துள் ளது.
கோயம்புத்தூரில் இந்தத் திட்டம் கடந்த 80 நாட்களாக சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. அதே போல் தஞ்சாவூர் மாநகரி லும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஒத்துழைப்பு தேவை எனப் பேசினார்.
ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில்: தஞ்சாவூரில் 3 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. தற்போது சில பேர் மட்டுமே கூட்டத்துக்கு வந்துள்ளோம். எல்லா ஆட்டோ ஓட்டுநர்களிடமும் இந்தத் திட்டம் தொடர்பாக கலந்து பேசி விரைவில் முடிவைத் தெரிவிக்கிறோம்” என்றனர்.