விவசாயிகள் சங்கம் கோரிக்கை
மன்னார்குடி, ஏப்.27- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற் றது.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி பங் கேற்று மே 20-ஆம் தேதிக்குள் பாசன வாய்க்கால்கள் ஆறுகளின் தூர்வாரும் பணிகள் மற்றும் மராமத்துப் பணிகள் பொதுப்பணித்துறையால் நிறைவேற்றப் பட்டு முடிக்கப்பட்டால் எதிர்வரும் குறுவை சாகுபடிக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கவும் உரிய நேரத்தில் எளிதாக விவசாயிகள் சாகுபடி செய்யவும் முடி யும். எனவே துறையின் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் பணி ஆய்வாளர்களின் உரிய கண்காணிப்பில் மேற்பார்வையில் இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண் டும் என கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதுகுறித்து பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘பாமணி யாறு, கோரையாறு, பாண்டயாறு, வளவ னாறு உள்ளிட்ட ஆறுகளின் முகத்துவா ரங்களில் உள்ள ஷட்டர்களில் பழுது நீக்கும் பணிகள் உடனே துவக்கப்பட்டு முடிக்கப் பட வேண்டும். வேளாண் துறையில் மண் பரிசோதனைகள் ஆங்காங்கே நடத்தி அதற்கு ஏற்ப உகந்த நெல் ரகங்களை பரிந்துரை செய்ய வேண்டும்.
வேளாண்மைத் துறையில் புதிய நெல் ரகங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் ஊராட்சி அளவில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தக வல் பலகைகள் வைத்து அவைகளின் மூலம் அவ்வப்போது விவசாயிகளுக்கு தக வல்களை தர வேண்டும். விவசாயிகளின் உற்பத்திச் செலவிற்கு ஏற்ப பருத்திக்கு கூடுதல் விலை கிடைப்பதற்கு நடவடிக்கை கள் எடுக்க வேண்டும்.
ஆடு, மாடுகளின் மூலமாக ஏற்படும் இழப்புகளை தவிர்த்துக் கொள்வதற்கு முழு மானிய விலையில் கம்பி வேலிகள் விவசாயிகளுக்கு தர வேண்டும். தோட் டக்கலைத் துறையின் மூலமாக அனைத்து வகையான மரக்கன்றுகள் வழங்குவ தற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் . கொர டாச்சேரி ஒன்றியத்தில் இடையபுரத்திலி ருந்து வெண்ணவாசல் வரை 4.5 கிமீ. தூர முள்ள இதர மாவட்ட சாலையை செப்ப னிட்டு விரிவு படுத்தி, திருவாரூர்- கமலா புரம், லக்ஷ்மாங்குடி-பொதக்குடி கொர டாச்சேரி வழியாக மன்னார்குடி செல்லும் அரசு போக்குவரத்து பேருந்துகள் இயக்கு வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
எருக்காட்டூர் சாலை விரிவாக்கத்தில் கமலாபுரம் பாசன வாய்க்காலில் பாதி அளவு தூர்ந்து விட்டது. இது அகழ்வு பணி களின் மூலம் சரி செய்யப்பட வேண்டும். எருக்காட்டூர் ஊராட்சிக்கும் மேல ராதா நல்லூர் ஊராட்சிக்கும் இடையில் பாண் டவை ஆற்றில் குறுக்கு நடைபாலம் முன்பு இருந்தது இப்போது அகற்றப்பட்டுவிட் டது. எருக்காட்டூர் குதம்பரனார் கோயில் ஆகிய இரண்டு கிராமங்களை இணைக்கும் பாலம் மீண்டும் கட்டப்பட வேண்டும்.
அரசு அறிவித்த ஆழ்குழாய் கிணறு களுக்கான மின் இணைப்பு இன்னும் முழு மையாக விவசாயிகளுக்கு வழங்கப்படா மல் உள்ளது. துரிதமாக நடவடிக்கை எடுத்து மின் இணைப்புகள் வழங்க வேண்டும். ஆறுகளில் மணல் கொள்ளை யை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வேண்டும்’’ எனத் தெரிவித் தார்.