districts

இளம்பெண் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருக

அரியலூர், ஜூன் 5-

     அரியலூர் அருகே இளம் பெண் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த இளம் பெண்ணின் பெற்றோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயங்கொண்டம் துணை  காவல் ஆணையரிடம் மனு அளித்த னர்.  

     அரியலூர் அருகே உள்ள அல்லி நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்  பெண் அபிநயா. இவர் கடந்த மே 31  அன்று தத்தனூர் கீழவெளி பகுதியில்  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப் பட்டார். இதுகுறித்த விசாரணையில் காவல்துறையினர் அவரது காதலன் பார்த்திபனை கைது செய்து சிறையில்  அடைத்துள்ளனர்.

      தனது மகளின் மரணத்தில் பல்வேறு  சந்தேகங்கள் உள்ளதாக இளம் பெண் ணின் தாயார் அமுதா ஜெயங்கொண் டம் துணை காவல் ஆணையர் ராஜா  சோமசுந்தரத்திடம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமை யில் மாவட்டச் செயலாளர் இளங்கோ வன், சிஐடியுசி துரைசாமி, சந்தானம், அம்பிகா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வந்து மனு அளித்தனர்.

    மனுவில், எனது மகள் வேலை பார்த்த இடத்திலிருந்து போன் செய்து அழைத்து இருசக்கர வாகனத்தில் சிலர் ஏற்றி சென்றுள்ளனர். எனவே என் மகள் கொலையில் பல்வேறு சந்தே கங்கள் உள்ளன. எனது மகளை திட்ட மிட்டு அழைத்துச் சென்று பாலியல் பலாத் காரம் செய்து கொலை செய்திருக்க லாம் என சந்தேகம் உள்ளது.  கைது செய்யப்பட்டுள்ள பார்த்தி பன் மட்டும் செய்திருக்க முடியாது.  இதற்கு உடந்தையாக சிலர் இருந்தி ருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது.

  எனவே எனது மகள் கொலைக்கு காரண மான அனைவர் மீதும் கொலை வழக்கு,  பாலியல் பலாத்கார வழக்கு, கடத்தல்  வழக்கு ஆகிய பிரிவுகளில் வழக்குப்  பதிவு செய்து கைது செய்து உரிய  தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.