districts

மே 22 இல் கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர், மே 13-  

    தமிழ்நாடு அரசு, வனத்துறை தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் உலகில் அழிந்துவரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

   இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் கடற்பகுதிகளில் இவ்வுயிரினம் கண்டறி யப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும், உலக கடற்பசு தினமான மே 28 ஆம் நாளினை கொண்டா டும் விதமாகவும், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

   மாணவர்களுக்கான போட்டியானது மே  22 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளி களில் பயிலும் 8, 9, 10 வகுப்பு மாணவர்கள்  முதல் பிரிவாகவும், 11, 12 ஆம் வகுப்பு மாண வர்கள் இரண்டாம் பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மாண வர்கள் மூன்றாம் பிரிவாகவும் வகைப்படுத் தப்பட்டுள்ளனர்.

   ஒவ்வொரு பிரிவிற்கும் தலா மூன்று பரிசு கள் என முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு  ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்று ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.10,000 வீதம்  மூன்று பிரிவிற்கும் சேர்த்து கூடுதல் பரிசுத் தொகையாக ரூ.30,000 வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக்கு வரைவதற்குரிய அட்டைகள் (chart) துறை  மூலம் வழங்கப்படும். இதர வரைவு உபகர ணங்களான பென்சில், வண்ணக்கலவைகள் போன்றவற்றை போட்டியாளர்களே கொண்டு வரவேண்டும்.  

   போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, பரிசளிப்பு விழா, இடம் முதலிய விவ ரங்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப் படும். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், விவரங்களை அறிந்து கொள்ள 96556 97390, 9688302337, 7502709591 ஆகிய அலை பேசிகளை தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.