districts

திருச்சியில் சிறுமி பலி : நூடுல்ஸ் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அரியலூர்,செப்.4- திருச்சியில் பலியான சிறுமி சாப்பிட்ட புல்டாக் நூடுல்ஸ் தரம் குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள் ளது. ஆய்வு முடிவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னும் உள்ளிட்ட 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.3.35 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செப்டம்பர் 4 அன்று திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் என்ற நூடுல்ஸை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்திருப்பது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் உணவு 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த உணவு பொருட்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் தரம் குறித்து ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.