districts

திருச்சி முக்கிய செய்திகள்

பொது இடங்களில் புகைபிடித்த 18 பேருக்கு அபராதம் விதிப்பு

தஞ்சாவூர், ஆக.21 -  தஞ்சாவூர் மாநகரில் பொது இடங்களில் புகை பிடித்த 18 பேருக்கு மாநகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க் கிழமை அபராதம் விதித்தனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகர் நல அலுவலர்  வீ.சி.சுபாஷ் காந்தி முன்னிலையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, பொது இடங்களில் புகை பிடித்த 18 பேருக்கும், பள்ளிக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்ற 33 கடைக்காரர்களுக்கும் என மொத்தம் ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பருத்தி ஏலம் பாபநாசம், ஆக. 22-    தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர்  மு.பிரியமாலினி  தலைமை வகித்தார்.    இதில் கும்பகோணம், இதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து ஆக மொத்தம் 938  விவசாயிகள் 111 மெ.டன் பருத்தி  எடுத்து வந்தனர்.    கும்ப கோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிடப் பகுதிகளைச் சார்ந்த 10 வணிகர்கள் கலந்துக் கொண்டு அதிகப் பட்சம்  குவிண்டாலுக்கு ரூ 7389, குறைந்தப் பட்சம்  ரூ 6709, சராசரி ரூ 7009 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மதிப்பு 78 லட்சம்.

ஆறு, குளங்களில்  பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : ஆட்சியர் 

தஞ்சாவூர், ஆக.21 -  ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  மேட்டுர் அணை நிரம்பிய நிலையில், அணையிலிருந்து விவசாய பணிகளுக்கு காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் முழுமையாக செல்கிறது. கொள்ளி டம் ஆற்றில் மழை நீர்வரத்தும் உள்ளது.  ஆற்றுநீரின் வேகம் அதிகமாக உள்ளது.  எனவே பொதுமக்கள்  யாரும் ஆழமான நீர்நிலைப்பகு திகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வோ வேண்டாம். தங்களது  கால்நடைகளை ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.  ஆறுகளில்  தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களி லும். அபாயகரமான இடங்களிலும் தன்படம் (செல்ஃபி) எடுப்பதை தவிர்த்திட வேண்டும். இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும், தவிர்த்திட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்குவதை குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.  சில நேரங்களில் ஆறுகளில் சுழல் ஏற்பட்டு அதில் மாட்டிக்கொள்ள நேரிடும். மாணவர்கள் மற்றும் நீச்சல் தெரி யாதவர்கள் ஆறுகளில் கவனமுடன் குளிக்க வேண்டும். பொதுமக்கள் குழந்தைகளை நீர்நிலைகளில் விளையாடச் செல் லாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலவச  மருத்துவ முகாம்

தஞ்சாவூர், ஆக.21 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை, செங்கமங்கலம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து, இலவச பொது  மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்  செங்கமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செங்க மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஈகை ஆர்.செல்வம் தலைமை வகித்தார். பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ஆதித்யன், பொரு ளாளர் சாமியப்பன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க கட்டணமில்லா தொலைபேசி அறிமுகம்

தஞ்சாவூர், ஆக.21-  தஞ்சாவூர் மாநகரில் அடிப்ப டை வசதிகள் தொடர்பான புகார் களைப் பெற்று உடனடியாக நட வடிக்கை எடுக்கும் விதமாக கட்ட ணமில்லா தொலைபேசி எண் விரை வில் அறிமுகம் செய்யப்பட வுள்ளது என மாநகராட்சி ஆணை யர் க. கண்ணன் தெரிவித்தார்.  இது குறித்து செய்தியாளர்களி டம் செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்சாவூர் மாநகரில் குப்பை கள் அள்ளப்படாமல் இருப்பது, புதை சாக்கடை கழிவு நீர் வழிந்து சாலையில் ஓடுவது, தெரு விளக்குகள் எரியாதது, குடிநீர் வராதது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் எளிதாக புகார் செய்யும் வகை யில் கட்டணமில்லா தொலைபேசி எண் விரைவில் அறிமுகம் செய்யப் படவுள்ளது.  இந்த எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சேவை கள் பெற எங்கு செல்ல வேண்டும் என்கிற தகவல் தெரியாததால் சிரமப்படுகின்றனர். 5 சதவீத ஊக்கத் தொகை இவர்களுக்காக அலுவலக முகப்பில் தொடுதிரை கணினி (கியாஸ்க்) ஒரு மாதத்தில் அமை க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாந கராட்சிக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்து வோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் வரி வசூல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. குப்பைக் கிடங்கில் தேங்கி யுள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக திருச்சி என்.ஐ.டி. மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகரில் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரமாக்கல் மையங்களில் செயல்பாடுகளை முழுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதை சாக்கடை ணைப்பில் வலை அமைக்க... புதை சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கு உணவுப் பொருள்கள், நாப்கின், துணிகள், சாக்குகள் போன்றவையே முக்கி யக் காரணங்களாக இருக்கின்றன.  இதைத் தடுக்கும் விதமாக வீடுகள், வணிக நிறுவனங்களிலுள்ள புதை சாக்கடை இணைப்பில் வலை அமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். மாநகரிலுள்ள சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் 15 நாள்களுக்கு பிறகு பிடிபட்டால், கோ சாலை அல்லது கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும். மீண்டும் மாட்டு உரிமையாளர்களிடம் மாடு கள் திரும்பத் தரப்படமாட்டாது. இதேபோல, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன் பாட்டைத் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார் ஆணையர். அப்போது, மாநகராட்சி செயற் பொறியாளர் சேர்மகனி, மாநகர் நல அலுவலர் வீ.சி.சுபாஷ் காந்தி  உடனிருந்தனர்.

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் , ஆக.21 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கூடலூர் கீழ்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பனையம்பாளையம்     புதுக்காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம்  க.பாண்டியம்மாள் தலைமையில்  நடைபெற்றது.  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்  கா.கந்தசாமி பேசினார்.  கரூர்மாவட்டம், அரவக் குறிச்சி வட்டம், கூடலூர்கீழ்பாகம் சின்னதாராபுரம்- தென்னிலை பிரதான சாலையில் அமைந்துள்ள பனையம்பாளையம் புதுக்காலனியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வரு கிறார்கள்.  அவர்களின் உடனடி தேவைகளான வீட்டு  வரி ரசீது, மின் இணைப்பு, சாலை வசதி, தெருவிளக்கு,  சுத்திகரிக்கப்பட்ட காவிரி குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஊராட்சி மன்ற நிர்வாகமும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்து வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.