கும்பகோணம், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில், சட்டப் படி தமிழக அரசு மாற்று இடம் வழங்கிய இடத் தில் குடியிருக்கும் தங்களை இடையூறு செய் வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென தாராசுரம் ரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் ஐராவதிஸ்வரர் கோயி லுக்கு மேற்கு பகுதியில் ரயில்வே ஸ்டேசன் ரோடு புறம்போக்கு இடத்தில், சுமார் 48 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 50 ஆண்டு களுக்கு மேலாக குடியிருந்து வந்தோம். இந்நிலையில் நாங்கள் குடியிருந்த பகுதி, கோயில் தோற்றத்தை மறைப்பதாக கூறி, தொல்லியல் துறைக்கு இடம் தேவையா னது என்ற நிலையில், அதற்குரிய இழப் பீட்டுத் தொகையுடன் மாற்று இடமும் வழங்கப் பட்டது. எங்களுக்கு வழங்கப்பட்ட இடத் திற்கு குடிபெயர்ந்து, 1990 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். இந்நிலையில் அரண்மனை தேவஸ்தா னம் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, அவர்கள் இடம் எனக் கூறி, கோயில் திருப்பணிக்கு நன்கொடை கேட்ட னர். மேலும், தாங்கள் அத்துமீறி ஆக்கிர மிப்பு செய்துள்ளீர்கள் என்றும், இவ்விடத் திற்கு வாடகை தர வேண்டும், இல்லாவிடில் வேறு நபர்களை குடியமர்த்தி விடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். இப்போது இந்த இடத்தில் மாத வாடகை நிலுவையில் உள்ளது. மேலும் மாத வாடகை ரூ.500-ஐ (ஆண்டுக்கு ரூ.6000) செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதி முறையாக தொல்பொருள் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் சர்வே செய்யப் பட்டு வழங்கப்பட்ட பகுதியாகும். இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.