திருவாரூர், மார்ச் 7 - இந்தியா கூட்டணி வேட்பா ளர்களை ஆதரித்து பிரச்சாரப் பய ணம் மேற்கொள்வதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக் கிழமை திருவாரூருக்கு வந்தார். இதனையொட்டி மன்னார்குடி யில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?, மதச்சார்பின்மையா? மதவெறியா?, கூட்டாட்சியா? ஒரு கட்சி சர்வாதி காரமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுகிற தேர்தலாக இருக்கும். 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றாமல், பாஜக தற்போது தேர்தலை சந்தித்து வருகிறது. பாஜக ஊழல் இல்லாத கட்சி, தனித்துவமான கட்சி என்றும், மோடி தன்னை பரிசுத்தமானவர் என்றும் கூறி வந்த நிலையில், உலகமே திரும்பிப் பார்க்கிற தேர்தல் பத்திர ஊழலில் பாஜக வுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி பதற்றம் அடைந்துள்ளார். ஆட்சிக்கு வரும்போது ஊழலை சகித்துக் கொள்ள மாட்டோம் என கூறிய மோடி, அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் போன்று, ‘மோடி கேட்’ ஊழல் என்று பெய ரெடுக்கும் அளவுக்கு நூதன மோச டியை செய்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் வெளிப்படுத்தி உள்ளது. குறிப்பாக, அரசியல் கட்சி களுக்கு நன்கொடை அளிக்க வேண்டுமெனில், வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அத னால் ரூ.20,000-க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரம் வெளிப் படுத்தப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் கம்பெனி சட்டம், மக்கள் பிரதி நிதித்துவ சட்டம், வருமானவரிச் சட்டம், வெளிநாட்டு நிதி பராமரிப்பு சட்டம், ரிசர்வ் வங்கி சட்டங்கள் திருத் தப்பட்டுள்ளன. குறிப்பாக லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் 7.5 சதவீதம் நன்கொடை வழங்கலாம் என்பதை மாற்றி அமைத்துள்ளதால், லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் நிறுவனங்கள் அரசியல் கட்சி களுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு, பாஜக கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டத் தின் மூலம், இதுவரை ரூ.16,492 கோடி அரசியல் கட்சிகளுக்கு நிதி வசூல் ஆனது. இதில், ரூ.8,252 கோடி பாஜக வுக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற அரசு நிர்வாகங்களை கொண்டு, தனியார் நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்திய தன் விளைவாக, பல நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் அளித்துள்ளது அம்பலமாகி யுள்ளது. பொருத்தமற்றது இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட் டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களுக்கு துணையாக இருந்து விட்டு, தற்போது கூட்டணியை விட்டு வெளியேறி இருக்கிறார். மேலும், கூட்டணி தர்மத்துக்காக அப்போது அமைதி காத்ததாகவும், தற்போது விமர்சனம் செய்வதாகவும் கூறுவது பொருத்தமற்றது. ஓட்டு போட்ட மக்களை கூட்டணி தர்மத்துக்காக ஏமாற்றுவது நியாயம் அல்ல. இதனை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் ஏப்.19 அன்று நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தலில் திமுக தலைமை யிலான ‘இந்தியா’ கூட்டணி வேட் பாளர்கள் 40 தொகுதிகளிலும், பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மன்னார்குடி தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பி.ராஜ மாணிக்கம், திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜி.பாலசுப்பிர மணியன் மற்றும் சிபிஎம் நகரச் செய லாளர் ஜி.தாயுமானவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.