திருவனந்தபுரம், ஜன.16- கேரளத்தில் ஏற்கனவே முடிவு செய் யப்பட்ட எஸ்எஸ்எல்சி மற்றும் மேல்நிலைத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை. ஆன் லைன் வகுப்புகள் மாற்றியமைக்கப்படும். எஸ்எஸ்எல்சி பாடத்திட்டம் பிப்ரவரி முதல் வாரத்திலும், பிளஸ் டூ இறுதி வாரத்தி லும் முடிக்கப்படும் என அமைச்சர் வி.சிவன் குட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படும். சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய் யப்படும். பள்ளி அளவில் கணக்குகளை பராமரிக்க ஆன்லைன் கல்விக்கான கைட் விக்டர்ஸ் புதிய போர்ட்டலை தொடங்கும். மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க அள வில் கோவிட் பரவல் இல்லை. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்க ளுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ உட்பட அனைத்து கல்வி நிறு வனங்களுக்கும் இது பொருந்தும். குழந்தை களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் திங்கள் கிழமை நடைபெறும் கல்வித் துறையின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறினார்.