தஞ்சாவூர், மார்ச்.29 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், மொழிபெயர்ப்புத் துறை யில் “பன்முக நோக்கில் தமிழும் ஆசிய இலக்கியங்களும்” என்ற தலைப்பில், வளர்தமிழ்ப் புலத்தில் உள்ள கருத்த ரங்கக் கூடத்தில் பன்னாட்டுக் கருத்த ரங்கம் நடைபெற்றது. விழாவின் துவக்கமாக, மொழி பெயர்ப்புத் துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் இரா.சு.முருகன் வரவேற்றார். தொடர்ந்து, மொழி பெயர்ப்புத் துறையின் இணைப் பேரா சிரியர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப் பாளர் சௌ.வீரலெஷ்மி அறிமுக உரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதி வாளர் முனைவர் சி.தியாகராஜன் தலைமை வகித்துப் பேசினார். வளர் தமிழ்ப் புல முதன்மையர் இரா.குறிஞ்சி வேந்தன் வாழ்த்திப் பேசினார். மொழி பெயர்ப்புத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் த.மீனாட்சி நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து அமர்வுகளில் முதலாவதாக ‘ஆசிய மொழியியல்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக்கையின் ஆய்வுத் தகைஞர் பேராசிரியர் ந.நட ராசப்பிள்ளை, தொடர்ந்து ‘மலேசியப் புலம்பெயர் இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் வளர்தமிழ்ப் புலத்தின் புல முதன்மையர் பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தன், ‘அரபு இலக்கியங்க ளில் சமயத் தாக்கம்’ என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக அரபு மொழித் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் அ.ஜாகிர் ஹுசைன் ஆகி யோர் கருத்துரை ஆற்றினர். அவரைத் தொடர்ந்து ‘ஜைனப் பண்பாட்டுப் புரட்சியும் இலக்கியப் போக்குகளும் - ஓநாய் குலச்சின்னம் நாவலை முன்னிலைப்படுத்தி’ மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப் புறவியல் துறை மேனாள் துறைத் தலைவர் பேராசிரியர் இ.முத்தையா, ‘ஆசிய மொழிகளில் நாட்டார் மரபு’ என்ற தலைப்பில் இணைய வழியாக லண்டனைச் சேர்ந்த அனாமிகா பண்பாட்டு மைய பேராசிரியர் பால.சுகுமார் கருத்துரை ஆற்றினர். மேலும் ‘சப்பானியப் புனைகதை கள்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ‘தமிழில் சென் கவிதை மரபு’ என்ற தலைப்பில் மொழி பெயர்ப்புத் துறையின் இணைப் பேரா சிரியர் சௌ.வீரலெஷ்மி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வின் இறுதியாக மாணவர் களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் சான்றிதழ்களை வழங்கினார்.