புதுக்கோட்டை, மே 15-
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துடன், கோரையாற்றை இணைக் கும் திட்டத்தில் இணைப்பு வழியை ஊர் மக்களுடன் பேசி முடிவு செய்ய வேண் டும் என தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செய லாளர் நா.கார்த்திகேயன், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச் சாமி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், ‘‘காவிரி குண் டாறு இணைப்புத் திட்டத் தில், திருச்சியிலுள்ள கோரையாற்றையும் இணைக் கும் திட்டம் தொடங்கப்பட்டி ருக்கிறது. இதில், கோரை யாற்றிலிருந்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள கால் வாய், அங்குள்ள தனியார் மதுபான ஆலைக்கு பாதிப் பில்லாமல், ஏறத்தாழ 3 ஆயி ரம் ஏக்கர் விளைநிலங் களைப் பாதிக்கும் வகையில் எடுத்துச் செல்லப்படுகிறது.
காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய், கோரையாறு இணைப்புக் கால்வாயைவிட உயரமா னது. இதனால், வெள்ளக் காலங்களில் மழைநீர் கோரையாற்றுப் பகுதியில் பெருவெள்ளத்தை ஏற்ப டுத்த வாய்ப்புள்ளது. எனவே, கோரையாற்றுப் பகுதி விவசாயிகள், பொது மக்களின் கருத்தறிந்து இத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.