பொன்னமராவதி, ஏப்.14 - இந்தியா கூட்டணி சார்பில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் கார்த்தி சிதம்பரத்திற்கு கைச் சின்னத்தில் ஆதரவு கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகர் பகுதி யில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட னர். இதில், திமுக நகரச் செயலாளர் அழ கப்பன், காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பி னர் பழனியப்பன் ஆகியோர் தலைமையில் நடந்த வாக்குச் சேகரிப்பில், பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் நல்லதம்பி, ஆலவயல் முரளி சுப்பையா உள்ளிட்டோர் வாக்குச் சேகரிப்பில் பங்கேற்றனர். தொட்டியம்பட்டி ஊராட்சி இந்திரா நகர் பகுதிகளில் நடந்த பிரச்சாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா சோலை யப்பன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சோலையப்பன், திமுக மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கிரிதரன் மற்றும் கூட்டணி கட்சி யினர் பங்கேற்றனர்.