தஞ்சாவூர், ஆக.12-
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் தஞ்சைக் கோட்ட 61 ஆவது ஆண்டு மாநாடு சனிக் கிழமை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தொடங்கி யது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டை, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் உதவிப் பொருளா ளர் வி.ஜானகிராமன் துவக்கி வைத்தார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட இணைச் செயலாளர் பா.சர வண பாஸ்கர் வரவேற்றார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொதுச் செய லாளர் வ.சேதுராமன் செயற் குழு அறிக்கையை முன் வைத்து பேசினார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொரு ளாளர் எஸ்.எல்.ஸ்ரீதர் வரவு- செலவு அறிக்கையை முன் வைத்து பேசினார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் செ.முத்துக்குமார சாமி சிறப்புரையாற்றினார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் ஆர். கே.கோபிநாத் நிறைவுரை யாற்றினார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் வி.எஸ்.பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.
அறிக்கையின் மீதான விவாதம், தீர்மானங்கள், தொ குப்புரைக்கு பின்னர் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சனிக் கிழமை இரவு திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது.