districts

கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை ஒப்படைக்க மாணவிகளுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை, ஜன.21-  மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022- 2023 ஆம் கல்வியாண்டில் கல்வி பயி லும் பழங்குடியினர் மாணவர்கள், ‘பெண்கல்வி ஊக்குவிப்பு உதவித் தொகை’ விண்ணப்பங்களை கல்வி பயிலும் பள்ளிகளில் ஒப்படைக்குமாறு மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுய நிதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் பயிலும் பழங் குடியினர் மாணாக்கர்கள் பெண்கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை (3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை), ப்ரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை பெற தகுதியுள்ள பழங்குடியினர் மாணாக் கர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச்சான்று, வரு மானச் சான்று, மதிப்பெண் சான்று,  வங்கி சேமிப்பு புத்தக நகல் மற்றும்  ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங் களுடன் தாம் பயிலும் கல்வி நிலை யங்களில் ஒப்படைத்து இக்கல்வி ஆண்டிற்கான உதவித்தொகையினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி யர் கேட்டுக்கொண்டுள்ளார்.