districts

img

பட்டுக்கோட்டையில் ரூ.1.14 கோடியில் அறிவுசார் மையம்: மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

தஞ்சாவூர்,  ஜூலை 21 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி யில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு மாணவ -மாணவிகளுடன் கலந்து ரையாடினார். பின்னர் மாவட்ட ஆட்சி யர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “தஞ்சா வூர் மாவட்டத்தில், முதல மைச்சர் காணொலி வாயி லாக கடந்த 5.1.2024 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி யில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1  கோடியே 14 லட்சம் மதிப்பில்  நூலகம் மற்றும் அறிவு  சார்ந்த மையம் அமைக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் மற்றும் அனைத்து போட்டித் தேர்வு களுக்கும் தயார் செய்யும் வகையில் மாணவ-மாணவி யர்கள் அமர்ந்து படித்திட  இருக்கைகள், மேஜைகள்,  போட்டி உலகத்தில் அனைத்து தகவல்களையும் அறியும் வகையில் கணினி கள், அறிவு சார்ந்த செய்தி களை தரும் 1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கலந்துரையாடல் அரங்கு, மாணவர்களின் பொருட்கள் வைப்பறை, உணவருந்தும் மேசை உள்ளிட்ட அனைத்து  வசதிகளுடன் நவீன முறை யில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான இளைய தலைமுறையினர் சாதனையாளர்களாக ஏற்றம்  பெரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய நாள்தோறும் பயிற்சி வகுப்புகள் நடை பெறுகின்றன. இந்த நூல கத்திற்கு வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாண வர்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.